சிறுவர்களை கொடுரமாக கொன்று சாதனை படைக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்பு படை
ஆறு, ஒன்பது மற்றும் 10 ஆம் தரங்களில் கல்வி கற்கும் 8 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை மூன்று வீடுகளிலிருந்து அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது
ஆப்கானிஸ்தான் வீடொன்றில் தூக்கத்திலிருந்த 8 சிறுவர்கள் உட்பட 10 பேரை வெளியே இழுத்து வந்து ஒரு அறைக்குள் வைத்து பின்புறமாக கைகளை கட்டி சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மீது கடந்த புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் பாடசாலை சிறுவர்களென அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்படுவதற்கு முன்னர் சிலருக்கு கைவிலங்கு இடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர் .ஆனால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரிவாக பார்க்க
பின்னூட்டமொன்றை இடுக