ஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில் சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இது குறித்த வாய் திறந்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கருத்துகளையும் ஆதாரங்களையும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், முழு உலகுக்கும் தெரிந்த ஜமால் கஷோக்கி குறித்த விடயம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்று முஹம்மத் பின் ஸல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பிடம் தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்திருப்பதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக