Lankamuslim.org

தென்கிழக்கு பல்கலைக்கழக 15 மாணவர்கள் கைது

leave a comment »

southeastUதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் வௌியேற்றப்படவில்லை

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 இல் 7:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக