எமது போராட்டங்கள் தொடரும்
ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை நாம் கைவிடப்போவதில்லை. இது தொடர்பில் மீண்டும் பொது மக்களையும், மகாநாயக்க தேரர்களையும் தெளிவுபடுத்தவுள்ளோம். அவருக்கு விடுதலை கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே தெரிவித்தார்.
இதேவேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
பின்னூட்டமொன்றை இடுக