அவசரகால சட்டம் நீக்கப்பட்டது : வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்
ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக கடந்த 7ம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த அவசரகால சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி நேற்று இரவு கையொப்பமிட்டுள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக