லண்டனில் இடம்பெற்ற எதிர்கால தலைவர்களை வளப்படுத்தும் நிகழ்ச்சி !!
ரிஷான் அலி : பிரிட்டனில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் முஸ்லிம் சிறுவர் ,சிறுமியர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நேற்று லண்டனில் University of Bedfordshire, Luton Campus யில் இடம்பெற்றது இதில் 400 ருக்கும் அதிகமான சிறுவர் ,சிறுமியர் கலந்துகொண்டனர் .
கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் குறித்த போட்டி நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரை இஸ்லாமிய அடிப்படையில் வளப்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளமை சிறம்பம்சமாகும் இப்படியான நிகழ்வுகள் இங்கு வாழும் இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்றுவருகின்றது .
பல்வேறு தலைப்புக்களில் நேற்று இடம்பெற்ற இறுதிச் சுற்று போட்டிக்கான முடிவுகள் ஏப்ரல் முதல் வாரம் அறிவிக்கப்படும் என இந்த போட்டி நிகழ்வுகளை நடாத்திவரும் National Children Competition -(NCC) அமைப்பு அறிவித்துள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக