Lankamuslim.org

எமது ஆடை மற்றும் கலாசாரம் குறித்து யாரும் எமக்குக் கற்றுத் தரத் தேவையில்லை

leave a comment »

Hisbulசிங்கள பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. கிந்தோட்டை, அம்பாறை, திகன போன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது எனவும், அரசாங்கம் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு ஒர் இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. அத்தனை இனங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது. எமது ஆடை மற்றும் கலாசாரம் குறித்து யாரும் எமக்குக் கற்றுத் தரத் தேவையில்லை. இது எமது மார்க்கக் கடமை, அரசியல் செய்யும் உரிமை, கலாசாரம் என்பற்றை பாதுகாத்து செயற்பட கூடிய சுதந்திரம் வேண்டும்.

கண்டி சம்பவத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் எனவும் பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Written by lankamuslim

மார்ச் 22, 2018 இல் 8:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக