அமித் வீரசிங்க உட்பட பத்துபேருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிப்பு
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 10 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு அமைய அமித் ஜீவன் வீரசிங்க உட்பட 8 பேர் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்திலும் சுரேத சுரசவீர உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கலகெதர நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்த சந்தேகநபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னூட்டமொன்றை இடுக