ஐ.நா : இலங்கை தொடர்பான விவாதம் திங்கட் கிழமை
ஐநா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி(திங்கட் கிழமை) இடம்பெறும். இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விவாதம் நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது, எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள் திடீரென ஊதிய அதிகரிப்புக்கோரி நடத்திய போராட்டத்தினால், பேரவையின் நேற்றைய அமர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் ஒத்திவைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவாதம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக