‘சபாநாயகர் அரசமைப்பை மீறியுள்ளார்’
சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்பை இரு தடவைகள் மீறியுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல- நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் ‘நாட்டைக் காக்கும் மக்களின் மகிமை’ பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அதனை மாற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லையென்றும் , ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக