Lankamuslim.org

முஸ்லிம் கட்சி தலைவர்களின் உம்றா கட்சி தாவலுக்கா ? அல்லது தம் உறுப்பினர்களை பாதுகாக்கவா ?

leave a comment »

qazasaqazஎஸ் .எம் .அப்துல்லாஹ் : ஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் , மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான றவூப் ஹக்கீம் , றிஷாத் பதியூதீன் ஆகியோருடன் இரு கட்சிகளின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உம்றா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் கட்சி தாவுவதற்கு தயாராகிவருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இரு கட்சிகளுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலை மறுத்துள்ளன ,

இரு கட்சி தலைவர்களும் தமது உறுப்பினர்களை பாதுகாத்து தம்முடன் வைத்துக்கொள்ளும் நோக்கில் உறுப்பினர்களை உம்றாவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர் , நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படும் நிலையில் தமது உறுப்பினர்களும் விலைபோய்விடலாம் என்ற அச்சம் காரணமாக குறித்த கட்சியின் தலைவர்கள் உறுப்பினர்களை தம்முடன் வைத்திருக்கும் நோக்கில் நாட்டை விட்டு சென்றுள்ளனர். தலைவர்களின் இந்த நடவடிக்கையை கட்சி தாவலுக்கான அடையாளமாக காட்டுவது முற்றிலும் தவறானதாகும் என அந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

Written by lankamuslim

நவம்பர் 8, 2018 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக