Lankamuslim.org

ஞானசார தேரருக்கு எதிரான முக்கிய வழக்கொன்று வாபஸ் பெறப்பட்டது

leave a comment »

bo3பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்று நேற்று (23) சட்ட மா அதிபரால் மீளப்பெறப்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் பலவந்தமாக நுழைந்து, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

Written by lankamuslim

நவம்பர் 24, 2018 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக