Lankamuslim.org

Archive for மே 21st, 2009

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் மனைவி, மகள், இளையமகன் உடல்கள்?

leave a comment »

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்களும் நந்திக் கடல் பகுதியில் கரையோரம் கிடப்பதாக சில தொலைக்காட்சி செய்திகள் புதன்கிழமை தெரிவித்தன. பிரபாகரன் உடல் இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு சுமார் 600 அடி தொலைவிலேயே இந்த மூவரின் உடல்களும் கிடந்ததாகக் கூறப்படுகிறது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனியின் உடல் கிடைத்தது தான் 2 நாள்களுக்கு முன் முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு பிரபாகரனின் உடல் கிடந்ததாகக் கூறப்பட்டது. இப்போது இதர குடும்ப உறுப்பினர்களும் இறந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. பிரபாகரன் மனைவி, மகள், மகன்கள் இறப்பு தொடர்பாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவிக்கும் தகவல்களும், அவை தெரியவரும் விதமும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. பிரபாகரன் இறப்பு பற்றிய செய்திகளையே நம்ப வேண்டாம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுவதால் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. “”மதிவதனி, மகள், இளைய மகன் ஆகிய மூவருமே தப்பிவிட்டார்கள், ஐரோப்பிய நாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்றெல்லாம் முன்னர் கூறப்பட்டது. பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் உடல்களைப் பார்த்து அது அவர்கள்தான் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்ததாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் பார்க்கப்பட்ட பிறகு அந்த இடம் முழுவதுமே சல்லடை போட்டு ராணுவத்தால் தேடப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அருகில் 600 அடி தொலைவில் இந்த மூவரின் உடல்களை எப்படி அவர்கள் அன்றே பார்க்காமல் போனார்கள் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ராணுவம் காவல் போடாமல் இருந்திருக்காது. அப்படி இருக்கும்போது இந்த மூவரின் உடல்கள் எப்படி அங்கு வந்தன என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ராணுவத்தின் கைகளில் சிக்கக்கூடாது என்று தங்களுடைய இயக்க வீரர்களைக் கொண்டே தங்களுடைய வாழ்க்கையை இவர்கள் அனைவரும் முடித்துக் கொண்டனரா, அல்லது ஏதேனும் வஞ்சகம் செய்து இவர்களைப் பிடித்து ராணுவமே சுட்டுக் கொன்றதா என்று மர்மமாக இருக்கிறது. சமாதி எங்கே?: வீர மரணம் அடைந்த பிரபாகரனுக்கு பொதுக் கல்லறையில்தான் உடல் அடக்கம் நடைபெறும் என்று இலங்கை ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. ஆனால் மற்றொரு வட்டாரமோ அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில்தான் அடக்கம் நடைபெறும் என்று அறிவித்தது. அரசு எதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

Written by lankamuslim

மே 21, 2009 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸ் சேவையில் ஆட்கiளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை கிழக்கில் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்களை திரட்டுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் பொலிஸ் நிலையங்களில் நடைபெற்றன ஒலிபெருக்கி மூலமும் துண்டுப்பிரசுரம் மூலமும் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. நூற்றக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் சமூகமளித்திருந்தனர் இவர்களில் அநேகமானோர் அடிப்படை கல்விதகைமையின்மை வயதெல்லை மற்றும் திருமணம் புரிந்தமை போன்ற காரணங்களினால் நிராகரிக்கப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

மே 21, 2009 at 4:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

Intresting western propaganda, The numbers seem to be all wrong

leave a comment »

It’s propaganda. The numbers seem to be all wrong. But Insallah one day ” Khilafa “Islamic state would rule the West

Netherlands and Belgium:
There are 1 million muslims in the Netherlands out of a population of 16 million, and 700.000 muslims out of a population of 10.6 million. Immigrants in the Netherlands and Belgium mainly originate from countries where the fertility rate is 2.5-1.8.
If 50% of all the newborn were muslim in the Netherlands and Belgium the muslim women would have to give birth to 25 children on average.
France:
Immigrants in France are mainly from countries where the fertility rates are 2.5-1.7. Claiming their average fertility rate has grown to 8.1 in France is … a claim.

The muslim population in EU is about 5% of the total population of 500 million, and the muslim population in Germany are no different. How is this going to lead Germany to become a muslim state 40 years from now, considering “muslim” fertility rates in Europe are declining faster than amoung non-muslims closing the fertility gap.

Written by lankamuslim

மே 21, 2009 at 1:10 பிப

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம.பி. க.பத்மநாதன் மதுரையில் காலமானார்

[ வியாழக்கிழமை, 21 மே 2009,
இலங்கையிலிருந்து இந்தியா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு கனகசபை பத்மநாதன் அவர்கள் மதுரையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என தெரியவந்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மதுரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பத்மநாதன் தனது 62 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலை, இன்று பிற்பகல் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை, அவரது பூதவுடல், அம்பாறை தம்பிலுவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், காரைதீவுக்கு மக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தம்பிலுவிலுவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அம்பறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

Written by lankamuslim

மே 21, 2009 at 12:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் –எஸ்.எம்.எம் பஷீர்


(பாகம் -2)

மீசைக்காரச் சிங்களவன் என்ற தலைப்பு பிறந்ததே ஒரு ஊர்ஜிதமற்ற செய்தியிலிருந்துதான். ஒரு நண்பர் கூறினார் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து மஹிந்த அரசு கிழக்கில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தபோது மஹிந்த ராஜபக்ஸ பிரபாகரன் இதுவரை மீசைக்காரச் சிங்களவனைப் பார்க்கவில்லை என்று கூறியதாக. யோசித்துப் பார்த்தால் ஜே.ஆரோ, பிரேமதாசாவோ அன்றி டிங்கிரிபண்டாவோ ஏன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவோ மீசை வைக்காத சிங்களவர்கள் தான். நான் அவர்களில் ஒருவன் அல்ல என்பதனை மஹிந்த இன்று நிரூபணம் செய்துவிட்டார். யூத சமூகம்போல் நாங்களும் மூளை வலுக்கூடியவர்கள.; புலம்பெயர்ந்தும் வளமுள்ளவர்கள் என்று பெருமைகொண்ட புலம்பெயர் புலித் தமிழர்கள் இன்னும் பிரபாகரன் சாகவில்லை போராட்டம் தொடரும், தமிழீழம் மலருமென்று கூக்கரலிடுவதன்மூலம் இவர்கள் அனைவருமே மூளையற்ற தமிழர்களா என்னும் சந்தேகமே எற்படுகின்றது.
நல்லவேளை இவர்களிடம் பிரபாகரனின் உடலம் கிடைத்திருந்தால் அதனை மம்மிபண்ணி பாதுகாத்து வணங்குவார்கள்போல் தோன்றுகிறது. 1959 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் திகதி “ஈழம் எங்கள் தெய்வம”; என்னும் நூலினை வெளியிட்டதுடன் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் சிறுபான்மையின மக்களை அனுமதிக்கவிடாது தடியடி நடாத்தி அடங்காத் தமிழன் என்னும் பெயரினைத் தக்கவைத்துக் கொண்டவர்.அதுமட்டுமன்றி மலையக மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைச்சுப்பதவிகளை வகிக்கமுடியாதவாறு மீசை வைத்த சிங்களவர் திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களுக்கு உதவிபுரிந்தவரும் இந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்தான் இவரின் மறுபக்கம் மகாராணிக்கு கணிதம் கற்பித்து மகாராணி கையுறையின்றி இவரின் கையைக் குலுக்கும் வாய்ப்பினையும் பெற்றவர். இந்த உயர்நிலை மனிதர்கள் அவர்களின் வாரிசுகள் அடங்காத் தமிழர்கள்.
ஆனால் தேவை ஏற்பட்டால் அடிக்கவும், கடிக்கவும் செய்பவர்கள். இன்றுவரை தமிழர்களுக்கு நடந்த அவலங்களுக்கு 30 வருடங்களாக இலங்கையில் கொலையும், கொள்ளையும் பொருளாதார அழிவுகளும் எற்பட்டமைக்கு ஆயதந்தாங்கிய பலர் காரணமாயிருந்திருப்பினும் அவர்கள் திருந்தி ஜே.வி.பி கூட ஜனநாயகத்திற்கு திரும்பியபோதும் திருந்த முடியாத புலிகள் தமது அஸ்தமனத்தடன் தம்மை நம்பிய தமிழ் மக்களையும் அழித்துவிட்டே போயிருக்கிறார்கள். சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் திருமலையில் க.வே பாலகுமாரன் தமிழ் மக்களைப் பாhத்து நிம்மதியாக தூங்குங்கள் நாங்கள் (புலிகள்) உங்களைப் பாதுகாப்பார்கள் ”யாமிருக்க பயமேன் என்று கூறிய புலிகள”; அம்மக்களை தமது பாதகாப்பு அரணாக அமைத்து அவர்களை அழிக்கச்செய்து விழிப்பேயின்றி நிரந்தரமாய் தூங்கிப்போனார்கள். புலம்பெயர் தமிழர்கள் தமது அறிவையும், வளத்தையும் பிரயோகித்து தமது மக்களை மட்டுமல்ல புலிகளையும் உருவாக்கி அழிக்கப்பண்ணிவிட்டார்கள். அடுத்த அழிவுத் திட்டத்திற்கு மீண்டும் தயாராகின்றார்கள். ”யாழ் குடாநாடினது வீழ்ச்சிதான் தமிழீழத்தின் இறுதிப்போர் 40 ஆயிரம் சிங்களப் படைகள் உள்ளன. இவர்கள் இங்கிருந்து தப்பிப்போகும் ஒரேயொரு வழி கடல்பாதை மட்டும்தான். இந்தக் குடாநாட்டினது வீழ்ச்சிதான் தமிழீழ விடுதலைப்போரின் இறுதிப்போராயிருக்கும். என்று சூளுரைத்து பேருரையாற்றிய சூசை” இன்று குடாநாட்டிலே என்று குறிப்பிட்டு மூன்றரை வருடத்துள் முல்லைத்தீவு கடற்பாதையையேனும் பாவிக்க முடியாமல் தமிழீழக் கனவையே சேர்த்தழிக்கும் இறுதிப்போர் நடந்து முடிந்திருக்கின்றது. சுமாதான காலத்தில் 2003 ல் நான் இலங்கை சென்றபோது மனித உரிமை செயற்பாட்டாளரென அறியப்பட்ட புலி சார்hன லண்டனில் இயங்கும் தமிழர் ஸ்தாபனமொன்றின் முக்கிய பிரமுகர் அயர்லாந்தில் இருக்கும் முரண்பாடுகளுக்கும், தீர்வுகளுக்குமான சர்வதேச நிறுவனத்தின் பிரமுகர்கள் இருவருடன் இலங்கை வந்திருந்தார்கள்.
என்னையும் புத்தளம் அகதிகள் முகாமிற்குச் செல்லும் பயணத்தில் இணைந்துகொள்ளக் கேட்டபோது கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தளத்திலுள்ள வடமாகாண அகதிகளைச் சந்தித்த பின்னர் வடக்குநோக்கிய தமது பயணத்தை தொடர்ந்து புலிகளின் பொலிஸ் மா அதிபர் நடேசனைச் சந்திக்க புறப்பட்டனர். என்னையும் அந்த மனித உரிமைவாதி அழைத்தார். அதற்கு நான் ஏனென்று கேட்டேன் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைபற்றி அவர்களுடன் கதைக்கலாம், அப்பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறை கட்டமைப்புபற்றி ஆராயலாம் என்றெல்லாம் என்னை தூண்ட முயன்றார். ஆனால் நான் புலிகளுக்கும் அவர்களின் பொலிஸ் அதிகாரப் பிரயோகத்திற்கும் கிழக்கு முஸ்லிம்களின் பிரதேசத்தில் இடமில்லை. உங்களது பொலிஸ்சேவையினை உங்களது பிரதேசத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை என புத்தளத்திலிருந்தே நான் கொழும்பிற்கு திரும்பிவிட்டேன். அந்த நடேசன் இன்று மாமனிதராக மரிக்காது தமிழ் சமூகத்திற்கு இறுதிவரை பொய்யுரைத்தே உத்தியோகபூர்வ மரணச் சடங்கின்றி மடிந்துபோனார். வடமாகாண புத்தளம் வாழ் முஸ்லிம்களின் சோகக்கதைகேட்டு புலிகளிடம் நியாயம் கேட்கப்போன அந்த இரு வெள்ளையர்கள் மீண்டும் முகங்காட்டவே இல்லை.; இந்த அடங்காத் தமிழர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்பற்றி இன்று சிலாகித்துப் பேசுகிறார்கள். சர்வதேச நீதிமன்றக் குற்றங்களில் கூறப்படும் இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை முஸ்லிம்கள்மீது புலிகள்தான் செய்தார்கள். இப்போது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இருக்கவில்லை அதன் உருவாக்ககாலத்தில் லண்டனில் அதுதொடர்பாக உள்ள விடயங்கள் ஆராயப்படசட்டத்தரணிகள் குழுவில் சிலகாலம் நானும் அங்கம் வகித்தேன். அதனையொத்த குற்றத்தை புலிகள் 2006 ல் மூதூரில் செய்தார்கள.; ஆனால் இன்று இந்தக் குற்றவாளிகள் உயிருடனில்லை. தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.; சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு இதனைவிட குறைந்த தண்டனையைத்தான் வழங்கியிருக்கமுடியும். புலம்பெயர் புலிகளின் பேச்சாளர்களான எரிக் சொல்ஹெய்ம் இன்று தமிழர்களுக்கு சயாட்சி வழங்கத் தவறினால் போராட்டம் வேறு வழியில் தொடரலாமென எச்சரிக்கை விடுத்துள்ளார். நோர்வே அரசின் மூக்கு நுழைப்பு இந்த 30 ஆண்டுகாலப் போராட்டத்துடன் தொடங்கியது. நோர்வே அரசாங்கம் இலங்கையில் 1970 ற்கு பிந்திய காலத்தில் நோர்வேயின் சீனோர் (ஊநலழெச) உத்தியோகஸ்தர் ஒருவர் சிங்கள 1977 இனவன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்மீது பரிவுகொண்டு தான் அங்கு சேவையாற்றியமையை பயன்படுத்தி ஆயத போராட்டத்தில் ஆர்வங்கொண்ட தமிழ் சக்திகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தனி நாட்டுப் போராட்டத்தினை ஆதரித்த அதற்கான பயிற்சி வழங்கி உதவுவதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தில் பாரிய நிலப் பிரதேசத்தினை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை அறியமுடிந்தது. அவரது வேண்டுகொளை ஏற்ற தீவிரவாத இளைஞர்கள் த.வி.கூட்டணி தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களை அணுகி அவர் அன்றைய பிரதம மந்திரி திரு பிரேமதாசாவிடம் சமூக நடவடிக்கைகளுக்காக அவ்வாறான நிலத்தினைப் பெறுவதற்கு முயற்சித்தார். அதுகுறித்து பிரேமதாசா வாளாவிருந்ததனைக்கண்டு அவ்விளைஞர்கள் தொழிற்சங்க வாதியும் பிரேமதாசாவிற்கு நெருங்கியவருமான கே.சி நித்தியானந்தனை அணுகினர். கே.சி ஏன் தன்னிடம் நேரடியாக வரவில்லை என குறைபட்டுக் கொண்டதாகவும் முயற்சித்துப் பார்த்தார். பிரேமதாசா மீண்டும் அதனைக் கவனிப்பதாகக்கூறி வாளாவிருந்துவிட்டார். இதனை என்னிடம் கூறிய மூலச் செய்தியாளர் பிரேமதாசா இக்கோரிக்கை தொடர்பில் சந்தேகப்பட்டிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்..

–தொடரும் ….

http://www.unmaikal.com

Written by lankamuslim

மே 21, 2009 at 11:03 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது