Archive for மே 28th, 2009
கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர்
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி வவுனியா நிவாரண முகாமில் கைது!
புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி வவுனியாவில் உள்ள நிவாரண முகாம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் சிவதாய் எனும் இயற்பெயரை கொண்ட இவர் வன்னியில் இருந்து மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மோதல் தவிர்ப்பு பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்களுடன் மக்களாக வந்ததாக தெரிவிக்கும் தமிழினியிடம் தற்போது படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
இவர் 20003ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற புலிகள் அரசு பேச்சுவார்த்தைகளில் ஜெனிவா, நோர்வே, தாய்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற பேச்சுக்களில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
neruppu.com
Pakistan, the main country to help defeat LTTE – JVP leader
The key supporter of Sri Lanka to eradicate three decades of LTTE terrorism is Pakistan, JVP leader Somawansa Amarasinghe has said.
He told the media in Colombo, Sri Lanka yesterday (May 27) that all Sri Lankans should be grateful to the Pakistani government and its people for their support.
Colombo Today
The MBRLs received from Pakistan were a great help in preventing the LTTE’s capture of the Jaffna peninsula, Mr. Amarasinghe said, and commended the Islamabad government for extending training, technical expertise and modern weaponry after India and other countries refused to do so.
The LTTE had tried to take revenge by making an attempt on the life of the country’s high commissioner in Colombo, Sri Lanka, but it was fortunate it had failed, said the JVP leader.
Other than Pakistan, countries like China and Russia extended commendable support to eradicate LTTE terrorism.
Despite whatever party in government in Sri Lanka, it is praiseworthy that China had continued its support unwaveringly, he said.
Pakistan’s supply of high-tech military equipment
LONDON: Pakistan’s supply of high-tech military equipment and positioning of some of its highly trained army officers in Sri Lanka played a key
role in the ultimate defeat of Tamil Tigers, Pakistani media has claimed.”It was the Pakistani defence cooperation with Sri Lanka as the largest suppliers of high-tech military equipment that played a major role in the ultimate defeat of the LTTE at the hands of the Sri Lankan army,” The News quoted well placed sources in the Pakistani establishment as saying.
The newspaper said the defence cooperation between Sri Lanka and Pakistan had grown significantly in recent years as Islamabad, unlike New Delhi, had no problems supplying the state-of-the-art weaponry to Lankan army to accelerate its counter-insurgency operations against the LTTE which finally ended with the killing of Tamil chief Vellupillai Prabhakaran. It was exactly a year ago, in the first week of May 2008, that Sri Lankan army Chief Lt Gen Fonseka visited Pakistan and held detailed talks with his Pakistani counterpart Chief of Army Staff General Asfaq Parvez Kayani to finalise the purchase of high-tech arms for the Lankan armed forces, which were embroiled in an intense battle with the LTTE forces even at that time. The Times of India
|
|
ஐ.நா.மனித உரிமை பேரவையில்இலங்கைக்கு அமோக வெற்றி
இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூன்று அமர்வுகள் நேற்று நடைபெற்றன. மூன்றாவது அமர்வின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், கியூபா உட்பட 29 இலங்கையின் நட்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்து இலங்கைக்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்தன. “இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச சமூகம் உறுதுணையாக இருக்கிறதென்பதனை இந்த வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவிலிருந்து கூறினார்
பிரபாகரனின் தாய் தந்தை அரச நிவாரண முகாமில்!
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாய், தந்தை ஆகியோர் வவுனியா பகுதியில் அரசு உருவாக்கியுள்ள நிவாரண முகாமில் இருப்பதாக தெரியவந்துள்ளது. யுத்த சூனிய பிரதேசத்தின் இறுதி பகுதியை படையினர் விடுவித்தபோது 76 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை, 71 வயதுடைய வேலுப்பிள்ளை பார்வதி ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாய் தந்தையர்களான இவர்கள் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பித்ததை தொடர்ந்து பல தமிழ்மக்கள் தமிழகத்திற்கு சென்று அடைக்கலம் கோரினர். அவ்வாறு சென்றவர்களில் முதன்மை பெற்றவர்களான இவர்கள் 2003ம் ஆண்டு ரணில்-பிரபா இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் இருந்து கொழும்பு திரும்பிய இவர்கள் அரச உலங்குவானூர்தியில் வன்னிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
neruppu.com
ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்தநிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் பல ஊடகவியலாளர்கள் புலிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்யும் ஊடகவியலாளர்களை விமான நிலையத்தில் கைது செய்யுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
athirady.com