Lankamuslim.org

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய இராணுவ லெப்டினன்ட்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய இராணுவ லெப்டினன்ட் ஒருவர் புலிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுடன் குறித்த இராணுவ லெப்டினன்டுக்கு நேரடி தொடர்பு காணப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவ சிப்பாய் போன்ற உடையணிந்து தற்கொலை குண்டுதாரிகளுக்கு இராணுவ லெப்டினன்ட் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும் இந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது அண்மையில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாக புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by lankamuslim

மே 24, 2009 இல் 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது