புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய
புத்தளம் பல்லம காட்டுப்பகுதியில் வைத்து கொள்ளைகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றுகாலை 10மணியளவில் கைது செய்யப்பட்டதாக பல்லம பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்றுகாலை முந்தல் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், பின்னர் பொலீசார் தேடிச்சென்ற வேளையில் பல்லம காட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்த போது காட்டிலுள்ள கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இரண்டு சந்தேகநபர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தற்போது முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கைப்பற்றியிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.