Lankamuslim.org

ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்தநிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் பல ஊடகவியலாளர்கள் புலிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்யும் ஊடகவியலாளர்களை விமான நிலையத்தில் கைது செய்யுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

athirady.com

Written by lankamuslim

மே 28, 2009 இல் 9:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது