Lankamuslim.org

புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

selvarasa_pathmanathan_02

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கான பொறுப்பாளர் கஸ்ரோ என்றழைக்கப்படும் வீரகத்தி மணிவண்ணன் உள்ளிட்ட 18 நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களின் பெயர் விபரங்களை அடங்கிய பட்டியல் ஒன்றை தாம் மீட்டுள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. கனடா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி, ஒல்லாந்து, மொரீசியஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சுவிடன், பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஒஸ்ரியா, இத்தாலி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் நிதியுதவிகளை சேகரிப்போர் மற்றும் அவற்றின் பொறுப்பாளர்கள் குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது

 Ilakku.com

Written by lankamuslim

மே 29, 2009 இல் 2:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது