Archive for மே 22nd, 2010
இந்திய விமான விபத்தில் 158 பேர் மரணம் அதில் 103 பேர் வரை முஸ்லிம்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புறப்பட்டு வந்தது. போயிங் 737 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 160 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 168 பேர் இருந்துள்ளனர் அதிலும் கேரளா மாநிலத்தை சேர்த்தவர்கள் அதிகள் இருந்துள்ளனர் இவர்களில் 105 வரையிலான முஸ்லிம்கள் இருந்தமை விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெயர் பட்டியலை பார்க்கும்போது தெரிய வருகின்றது அதில் 103 பேர் வரை வபாத்தாகியுள்ளனர், பயணிகளில் 8 பேர் உயிர் தப்பியுள்ளனர் .
சுமார் 4 மணி நேர, நேரடி பயணத்துக்குப் பிறகு அதிகாலை 6.30 மணியளவில் அந்த விமானம் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியுள்ளது விமான பிரயாணிகள் பட்டியலை பார்க்க..