Lankamuslim.org

Archive for ஜனவரி 2nd, 2011

மீள் திரும்பும் யாழ் முஸ்லிம்களின் மீளாத் துயரம்: ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்:புத்தளத்தில் தாங்கள் பெற்றுவந்த (உணவு)பங்கீடுகளை நிறுத்திவிட்டு நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற சென்ற  முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பதிவுகள் மீள் குடியேற்ற செயற்பாடுகள்  ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.  இது யாழ் முஸ்லிம்கள்   மீண்டும் கூட்டாக அதிகளவில் திரும்புவதில் எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை யாழ்ப்பானத்திலிருந்து 1990 ல் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் 558 குடும்பங்கள் யாழ் திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் புத்தளத்திலும் கூட எவ்வித வாழ்வாதாரமுமற்ற நில உடமையற்ற குடும்பங்களாகும். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் ,பள்ளிவாசல்கள் , மதரசாக்கள் போன்ற  பொதுவிடங்களில் தங்கி வருகிறார்கள். சென்ற வாரம் மேலும் 89குடும்பங்கள் மீள் திரும்பியதை  தொடர்ந்து அப்பொது தங்குமிடங்கள் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2011 at 9:56 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது