Archive for ஜனவரி 8th, 2011
அஷ்ஷெய்க் ரிஸ்வான் -நளீமி வபாத்தாகியுள்ளார்
நேற்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் விபத்துக்குள்ளாகி கால்கள் இரண்டையும் இழந்திருந்த சிகிச்சை பெற்றுவந்த அஷ்ஷெய்க் ரிஸ்வான் -நளீமி- இன்று மாலை வபாத்தாகியுள்ளார்-இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-
கலியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் நேற்று புகையிரதத்திலிருந்து இறங்க முயன்றபோது தவறி புகையிரத தண்டவாள பகுதியினுள் விழுந்துள்ளார் இரண்டு கால்களும் முற்றாக துண்டாடப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவின் விசேட கண்காணிப்பு பகுதில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று மாலை வபாத்தாகியுள்ளார்- அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வழங்குவானாக – ஆமீன்
இலங்கை இந்திய பயணிகள் கடல் போக்குவரத்து விரையில் ஆரம்பம்
இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் பயணிகள் கடல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று பிற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப் பட்டுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந் தியா சார்பில் உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இலங்கை சார்பில் துறை முகங்கள், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரேயும் கைச் சாத்திட்டனர்.
இதன்படி கொழும்பு- தூத்துக்குடி, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. முதலில் கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையில் முதலில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக முன்னாள் யாழ்.மாநகர பிரதிமேயர் பஷீர்
இனங்கள் மத்தியில் நல்லுறவு நீடித்து நிலைத்திருக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமையவேண்டும் என்று யாழ்.மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ.பஷீர் வலியுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு புத்தள மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது யாழ்.மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் எம்.ஜீ.பஷீர் சாட்சியமளித்தார்.
எமது நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் சகல இனங்களும் ஒன்றிணைந்து வாழ வழி ஏற்பட்டுள்ளதுடன் அது நிலைத்திருக்க நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்யவேண்டுமென’ அவர் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »