Lankamuslim.org

Archive for ஜனவரி 10th, 2011

புத்தளத்தில் நிருவாக அலகுகளில் பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றது: எஹ்யா

with one comment

கடந்த வெள்ளிக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்டத்திற்கான அமர்வில் சாட்சியமளித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன் அவர்கள் தெரிவித்த முக்கிய விடையங்கள் இங்கு தருகின்றோம்

புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழுகின்ற மூவின மக்களும் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். புத்தளத்தில் இருக்கின்ற மக்களுடைய நிருவாக அலகுகளிலேயே பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை இந்த நல்லினக்க ஆணைக்குழு முன் சமர்பிக்க விரும்புகின்றேன் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 6:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு பதிவு தொடர்பான முக்கிய தீர்மானம்

leave a comment »

புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பாக பிரதி தேர்தல் ஆணையாளருடனான விசேட சந்திப்பின்போது   முக்கிய தீர்மானங்கள் எடுக்கபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி எமது lankamuslim.org செய்தியாளருக்கு தெரிவித்தார்.

இதன் பிரகாரம் வடக்கிலிருந்து புலிகளின் வெளியேற்றப்பட்டு புத்தளம் பிரதேசத்தில் வாழும் வட மாகாண முஸ்லிம்களுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பதை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னார்தான் நிறுத்த வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையையும் ஏற்று இணக்கம் காணப்பட்டதாகவும்  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 4:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொடரும் மழையினால் உயிர் இழப்புக்களும் சேதங்களும் அதிகரித்து செல்கின்றது

leave a comment »

கடும்மழை, வெள்ளம், மண்சரிவால் நாட்டின் கிழக்கு, மத்திய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது , 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மத்திய மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ,மண்சரிவில் இரு பிள்ளைகள் உயிருடன் புதையுண்டுள்ளனர். சுமார் 50வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 8 இலட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கண்டி 2ஆம் இராஜசிங்க மாவத்தையில் இடம்பெற்ற மண் சரிவினால் உயிரிழந்த 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது இதுவரை 9 பேர் உயிர் இழந்துள்ளனர் அன்று அறிவிக்கப் பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 11:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் நோக்கி 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்

with 2 comments

புத்தளத்தில் வாழ்ந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களின் மற்றுமொரு தொகுதியினர் நேற்று இரவு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றுள்ளனர். 1990 ஆம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களா புத்தளத்தில் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த இவர்கள் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் 370 பேர் 6 பஸ்களில் புறப்பட்டு  சென்றுள்ளனர்.

இவர்கள் புத்தளத்தில்  பெற்றுவந்த உளர் உணவு பங்கீடுகளை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற்றதுக்கான பதிவுகளை மேற்கொள்ளவெனவும் யாழ்ப்பாணத்தில் வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகியுள்ளனர் என்று எமது புத்தளம் lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் படங்கள் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 10, 2011 at 10:43 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது