Lankamuslim.org

Archive for ஜனவரி 15th, 2011

அமைச்சர் பசில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு

leave a comment »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உடனடியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அறிய முடிகின்றது.வெள்ள நிலவரம் குறித்த உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான வி.முரளீதரன், பஷீர் சேகு தாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், வீதிகள், விவசாய நிலங்கள் என்பன குறித்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறும், அதற்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ் உறுதியளித்துள்ளார்

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 7:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் மன்னார், மன்னார் யாழ்ப்பணம் புதிய பாதை !

leave a comment »

எதிர்வரும் 16ம் திகதி 288 மீற்றர் நீளமான சங்குப்பட்டிப் பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது துபாய் வழங்கிய 800 மில்லியன் ரூபா கடனுதவி மூலம், கடந்த 8 மாத காலமாக நிர்மாணிக்கப்பட்டுவந்த பாலம் தற்போது பூர்த்தியான நிலையை அடைந்திருப்பதாக தெரிவிக்கபடுகின்றது

இதனால் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறையும் என்றும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது இதன்மூலம், கொழும்பிலிருந்து புத்தளம் மன்னார் ஊடாகக் யாழ்ப்பாணத்தை அடைய போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைவதுடன் , பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும் என்றும் எதிர்பார்கப்படுகின்றது எனினும் புத்தளம் மன்னார் பாதை கடந்த வருடம் திறக்கப்பட்டாலும் நிர்மா வேலைகள் தொடர்ந்து விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 4:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பிரதேசங்களில் மஸ்ஜிதுகள் ஊடாக நிவாரணம் சேகரிக்கும் பணி தொடர்கின்றது

with one comment

கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவென நாடு பூராவுமுள்ள மஸ்ஜிதுகளின் ஊடாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மக்களிடம் பொருட்கள் , பணம் ஆகியவற்றை பிரதேச கிராம மஸ்ஜிதுகளிடம் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது நேற்று வெளிக்கிழமை நாடுபூராவுமுள்ள 2500 ஜும்மாஹ் மஸ்ஜிதுகளின் -கிழக்கின் பாதிக்கப்டாத பகுதிகளில் மஸ்ஜிதுகள் ஊடாகவும்- ஏனைய  மஸ்ஜிதுகளின் ஊடாகவும்

இன்னும் பல பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலமாகவும் நிவாரண உதவிகளுக்கான வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளதாவும் நாட்டின் பல பாகங்களிலும் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டு கடந்த இருதினங்களாக கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போதும் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் எமது lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 11:09 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு பிரதேசத்துக்கு 345 மெ. தொ. உணவு நேற்று அனுப்பி வைப்பு

with 2 comments

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன. 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய அரசின் சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 10:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மண் சரிவு அச்சுறுத்தல் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம்

leave a comment »

மலையகத்தில் மண் சரிவு அச்சுறுத்தல் மிக்க இருப்பிடங்களிலிருந்து சுமார் 700 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் இருநூறு குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினதும் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் குறிப்பிடுகையில், மழை காலத்தைத் தொடர்ந்து திடீரென வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக கண்டி மாவட்டத்தில் 1215 முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2011 at 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது