Lankamuslim.org

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸா மீது கனரக தாக்குதல்களை நடத்திவருகிறது

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேல் பலஸ்தீன காஸா பிராந்தியத்தின் மீது விமான மற்றும் கனரக மோட்டார் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் நேற்றும் விமான தாக்குதலை மேற்கொண்டு காஸா பிராந்தியத்தில் ஒருவரை கொன்றுள்ளதுடன் சிறுவர், சிறுமியர் உட்பட ஒன்பது பேரை படுகாயப்படுத்தியுள்ளது. இன்று இஸ்ரேல் யுத்த தாங்கிகள் காஸாவின் கான் யூனுஸ் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு குழந்தைகள் தாக்குதல்களுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதுடன். ஒரு மஸ்ஜித் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டு அதன் மினாரத் சேதமாக்கப்பட்டுள்ளது .

நேற்று இஸ்ரேல் விமான தாக்குதலை மேற்கொண்டு காஸா பிராந்தியத்தில் ஒருவரை கொன்றுசிறுவர் ,சிறுமியர் உட்பட ஒன்பது பேரை படுகாயப்படுத்தியதை தொடர்ந்து அந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை இன்று திங்கள்கிழமை ஹமாஸ் மற்றும் ஜிஹாத் இராணுவப் பிரிவுகள் இணைந்து மேற்கொண்டன. அதை தொடர்ந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை காஸா மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது .

 

 

 

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2012 இல் 8:01 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக