விபத்தில் அக்குறனை மாணவி வபாத்
அஸ்லம் அலி : அக்குறனையைச் சேர்ந்த பாத்திமா ஹப்சா என்ற 16 வயதுடைய மாணவி இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வபத்தானார். கட்டுகஸ்தோட்ட இனிகல வித்தியாலத்தில் கற்றுவந்த மாணவி இன்று குறித்த பாடசாலைக்கு செல்வதற்காக தனியார் பஸ்ஸொன்றில் வந்த மாணவி பஸ்ஸிலிருந்து இறங்கி முன்னால் சென்ற வேளை அந்த பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மாணவியின் ஜனாஸா கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தியாகத்தை நினைவூட்டும் இந்த நாட்களில் குறித்த மாணவிக்காகவும் பிராத்திப்போம் . குறித்த மாணவி அக்குரணை நீரல்ல மௌலவி கலிபதுல்லாஹ்வின் மகளாவார்.
Innalillahi wa inna ilaihi rajioon
F. Mohamed
ஒக்ரோபர் 26, 2012 at 11:56 பிப