நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும் உறுதிகொள்வோம்
எப்.எம்.பர்ஹான்: அன்பினிய சகோதர சகோதரிகளே! புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை), மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
லட்சோப லட்சம் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனைசெய்யும் இந்நாளை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும், நமது நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்துக்கொள்வோமாக.
இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக எனப்பிரார;த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அன்புடன்,
அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பா.உ.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்.
பின்னூட்டமொன்றை இடுக