கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் வபாத்
மூதூர் செய்தியாளர்: கட்டாரில் இடம் பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர் ஓருவர் வபாத்தாகியுள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் மற்றுமொருவர் காயத்திற்கள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் வபாத்தாகியவர் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சம்மூன் மஹீப் (வயது : 42)என்பவராவார். இவரின் ஜானாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக மூதூரிலுள்ள அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பின்னூட்டமொன்றை இடுக