Lankamuslim.org

திருகோணமலையை அண்மித்திருந்த நீலம் சூறாவளி இந்தியா நோக்கிப் பயணம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த நீலம் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.தற்போது சூறாவளி நாட்டிலிருந்து வட திசையில் இந்தியா நோக்கிப் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அனர்த்த முகாமைததுவ மத்திய நிலையத்தின் தகவலின் படி, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி,நுவரெலிய, கேகாலை,திருகோணமலை, கொழும்பு மற்றும் முல்லைத்தீவு, குருநாகலை, ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளி விலகிச் சென்ற போதிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளில் கடல் சற்றுக் கொந்தளிப்பாகக் காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2012 இல் 10:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக