ஹஜ்ஜை நிறைவேற்ற 8 ஆயிரம் பேரை அனுமதிக்க கோரிக்கை
இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற 8 ஆயிரம் பேருக்கு அனுமதி கோரியபோதும் உடனடியாக 2800 பேருக்கு மட்டும் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது
இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது கடந்த முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற இறுதி நேரத்தில் 6 ஆயிரம் பேர் வரை அனுமதிக்க பட்டனர் என்பது குறிபிட தக்கது
பின்னூட்டமொன்றை இடுக