Lankamuslim.org

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்-கெஹலிய ரம்புக்வெல்ல

leave a comment »

புலம்பெயர் தமிழ் மக்கள்  மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம்  தயார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் தவறான வழியில் நடத்தியிருப்பதுடன், இதனால் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

சில சர்வதேச ஊடகங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பான செய்திகளை தவறாக வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எனவே, புலம்பெயர் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்

Written by lankamuslim

மே 16, 2010 இல் 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக