Lankamuslim.org

இப்பாகமுவ பிரதேசத்தில் மஸ்ஜித் ஒன்று தாக்கப்பட்டு மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளது

with one comment

இணைப்பு-1

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  மெல்சிறிபுர  கிராமத்தில்   அமைந்துள்ள  மஸ்ஜித் ஒன்றில் நேற்று இரவு மஹ்ரிப்  தொழுகையின் பின்னர் 7.00 மணியளவில்  நுழைந்த சிங்கள இன குழுவொன்று   அங்கிருந்த மின்சார விளக்குகளை அடித்து   உடைதுள்ளனர் என்று தெரிவிக்கபடுகின்றது    40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இந்த மஸ்ஜித் இட நெருக்கடி காரணமாக மஸ்ஜித்தை விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத சிங்கள இன குழுவொன்று இதை செய்துள்ளதாக அங்கு இருந்து   கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன  . இதுபற்றி தெரியவருவதாவது, இந்த மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்வதற்கான முயற்சியில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மஸ்ஜித்தின்  நிர்வாக சபையினர் ஈடுபட்டு வந்த போதும் . சிங்கள  பெரும்பான்மை இன  பிரதேசவாசிகளின் எதிர்ப்பின் காரணமாக விஸ்தரிப்பு  நடவடிக்கை தொடர்ந்தும் தடுக்கபட்டதாகவும் . கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மஸ்ஜிதை  விஸ்தீரனம் செய்வதற்கான அனுமதியை இப்பாகமுவ பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார் என்றும் . இதற்கிணங்க நிர்வாக சபையினர் மஸ்ஜித்தை  விஸ்தீரனம் செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுபட்டனர். இதனை கண்ணுற்ற   சிங்கள  பெரும்பான்மை இன பிரதேசவாசிகள் குழு ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் மஸ்ஜிதை  உடைபதற்கு முயன்றுள்ளது   இதில்  மஸ்ஜிதில் இருந்த மின்சார விளக்குகள்  அடித்து   உடைக்க பட்டுள்ளது    இதை தொடர்ந்து   போலீஸ்  தலையிட்டுள்ளதாக  தெரியவருகிறது.

Written by lankamuslim

மே 21, 2010 இல் 9:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Assalamu Alaickum,

    I am regret very much reading this news.
    Insha Allah, …………………………….

    I praise your website service.

    I expect your laters news.

    Jazakallah.

    Hasmathullah

    ஜூன் 28, 2010 at 12:10 பிப


பின்னூட்டமொன்றை இடுக