மனிதாபிமான உதவி கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத வெறியாட்டம்
காஸாவுக்கு நிவாரண் பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி பலரை கொலைசெய்துள்ளனர்: முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக சைப்ரஸ் நாட்டின் துறை முகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட ஒன்பது கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை காஸாவில் இருந்து 65 K.M தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய பயங்கரவாத கடற்படையும் , விமான படையும் சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் 6 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது ,15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயம் அடைத்துள்ளதாகவும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது ஆனால் கொல்லப்பட்டுள்ளவர்கள் 20 விடவும் அதிகம் என்று இஸ்ரேல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் தொகுதி நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கப்பல் தொகுதி முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பெருட்களை ஏற்றி சென்றுள்ளது மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவியாளர்கள் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட பிரீடம் போளோடில்லா Freedom Flotilla Convoy Video விரிவாக பார்க்க..
பின்னூட்டமொன்றை இடுக