Archive for ஜூன் 8th, 2010
ஜனாதிபதி மஹிந்த இந்திய செல்கின்றார் சீனாவின் உதவிப்பிரதமர் இலங்கை வருகின்றார்
ஜனாதிபதி மஹிந்த இன்று இந்தியா புறப்பட்டு செல்லவுள்ளார் இவர் இந்திய விஜயத்தின் போது இலங்கை அரசியல் , பொருளாதார , மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்திய பிரதமருடன் பேசுவார் என்று தெரிகின்றது நேற்று இது பற்றி கருத்து தெரிவித்த ஜே.வி.பி. இலங்கை அரசால் தயாரிக்கப்பட் டுள்ள அரசமைப்புத் திருத்தங்களை இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசிடம் காண்பிக்கவுள்ளார் என்றும் இந்தியாவின் ஒரு மாநிலம் போல் இலங்கை செயற்படுகிறது என்றும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது . அதே வேளை நாளை மறுதினம் வியாழக்கிழமை இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயும் முகமாக சீனாவின் உதவிப்பிரதமர் சாங்டிஜாங் அடங்கிய குழுவினர் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளனர் வரும் இந்தக் குழுவினர் சீனா வின் நிதி உதவியுடன் இங்கு மேற்கொள் ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடுவர். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர், சபாநாயகர் மற்றும் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடு வதுடன் அபிவிருத்திப் பணிகளைச் சார்ந்த அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளனர் என்று தகல்கள் தெரிவிக்கின்றன .