Archive for ஜூன் 11th, 2010
நியமனங்களின் போது முஸ்லிம்கள் புறகணிப்பு
திருகோணமலை மாவட்ட மாகாண சபையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குணவர்த்தன என்பவர் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவதும் மூன்றாவதுமான இடங்களில் இருக்கும் முஸ்லிம்களான திருகோணமலை மாவட்ட வேட்பாளர் டாக்டர் லாபிர் மற்றும் மூதூர் பிரதேச வேட்பாளர் தௌபீக் என்பவர்கள் புறகணிக்கபட்டு நான்காவது இடத்தில் இருக்கும் காமினி என்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நடவடிக்கை மாகாண சபை நியமன விதிகளை மீறும் செயலாக பார்கபடுகின்றது என்பதுடன் மாகண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்றும் நடவடிக்கையாக சுட்டிக்காட்டதக்கது
அதேபோன்று ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனத்தின் போதும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரிசானாவின் பெற்றோர் விடுதலை கோரி மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனு செய்துள்ளனர்
2005ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டார் இவரின் வறுமையில் வாடும் பெற்றோர் ரிஸானாவை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர், ரியாத்திலுள்ள சட்டப் பிரதிநிதி ஊடாக இந்த கருணை மனு அரசாங்க மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பண்டார அல் ஐபானிடம் கையளிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன . இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த முறை இவரின் வழக்கு நீதிமன்றம் வந்தபோது அப்துல்லா அல் ரசீம் என்ற நீதியரசர் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை மொழிபெயர்ப்பு பிழை என்பதால் நீக்குமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிபிடதக்கது.
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ரிசானா வீட்டு எஜமானின் குழந்தை மரணமடைந்தது தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். சவூதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு ரிசானா நௌபீக் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ததை அடுத்து விசாரணைகள் சவூதி அரேபிய நீதிமன்றத்தில் மீட்டும் ஆரம்பமானது