Lankamuslim.org

Archive for ஜூன் 14th, 2010

முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் தீயசக்திகள் சதித்திட்டம் : பிரதமர் ?

with one comment

பிரதமர் முஸ்லிம்கள் மத்தியில் ஆற்றிவரும் உரைகளின்போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்  நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகள் பற்றி பேசிவருகின்றார். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மார்க்க ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட சில முஸ்லிம் அரசியல் வாதிகள் முயன்று வருவதாகவும் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டு சக்திகளுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் துணை போக கூடாது என்று கடன் 3.6.2010 அன்று பிரதமர் டீ. எம். ஜயரத்ன தனது அலுவலகத்தில் சந்தித்த இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் மத்தியில் பேசும்போது கூறியுள்ளார் அதேபோன்று நேற்று 13.6.2010  அன்று நடைபெற்ற அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் வைரவிழா மாநாடு கொழும்பு கிரேண்ட் ஓரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றபோதும் பிரச்சினையின்றி வாழ்ந்த மக்களைப் பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்தி நிலைமைகளைச் சீர்குலைக்க பல சக்திகள் இன்று திட்டமிட்டு வேலை செய்கின்றன. இந்தச் தீய சக்திகள் குறித்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டு என்றும் பலம் குன்றிய நாடுகளை மேலும் பலவீனப்படுத்தி பிளவுகளையும் அதிகரித்து மிலேச்சத்தனமான செயல்கள் மூலம் தமது இலட்சியங்களை வெற்றிகொள்வதே இந்தச் சக்திகளின் உபாயமாகுமெனவும் தெரிவித்துள்ளார் மேலும் அங்கு உரையாற்றுகையில் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2010 at 10:35 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நளீமியாவின் கிலாபத்தை நினைவு படுத்தும் துருக்கிய காட்சியறை

leave a comment »

அல் குர்ஆனின் விஞ்ஞான  அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில் பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் ஜூன் மாதம் 12 தொடக்கம் , 15 ஆம் திகதி வரை என்ற கால அட்டவணையில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது இங்கு 3 பிரிவுகளாக காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் விசேட காட்சியறைகள் ஒன்றில் துருக்கிய காட்சியறை அமைக்க பட்டுள்ளது இங்கு இஸ்லாமிய கிலாபத் காலபகுதியில் உருவாக்கப்பட்ட , பயன்படுத்தபட்ட பல்வேறுபட்ட பொருட்களின் சில மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது இந்த காட்சி அறை கிலாபத் சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார் 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் இஸ்லாமிய கிலாபத் அழிக்க படும்வரையிலான காலபகுதில் 13 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இறுதியாக துருக்கியில் அழிவுகளில் இருந்து பாதுகாக்கபட்ட சில பொருட்களின் சில மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய கிலாபத்தை இறுதியில் ஐரோப்பியர் துருக்கியில் வைத்து வீழ்த்தினர் கிலாபத் வீழ்த்தப்பட்டு 86 வருடங்கள் கடந்துள்ளது உலகம் முழுவதிலும் முஸ்லிம் உம்மாஹ் அதன் வழியை சுமந்து கொண்டிருகின்றது என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 14, 2010 at 9:14 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது