Archive for ஜூன் 10th, 2010
முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது
M.ரிஸ்னி முஹம்மட்
காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் . வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…
கொம்பனித்தெரு குடியிருப்பு அகற்றப்பட்டமை தொடர்பான நூல் வெளிவந்துள்ளது
அண்மையில் கொழும்பு,கொம்பனித்தெரு பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் சட்டவிரோதம் எனக் கூறி அரசாங்கத்தினால் இடித்து தகர்த்து அகற்றப்பட்டன. இவற்றின் உண்மைத்தன்மையை விளக்கும் ஆவணங்களுடன், நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையம் -MIC-தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இதனை வெளியிட்டது.ரண்முத்து ஹோட்டலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற் வைபவம் ஒன்றில் நூலின் பிரதிகள் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது நூலின் பிரதியொன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமிடம் முஸ்லிம் தகவல் நிலைய செயலாளர் ஸுஹைர் காரியப்பர் கையளிப்பதை படத்தில் காணலாம் இந்த நிகழ்வில் முஸ்லிம் சமூக பல்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக சட்டத்தரணி அஸீஸ் The President of the Bar Association of Sri Lanka கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்
கல்முனை கடலில் காணாமல் போன மூவரில் ஒருவர் மட்டும் உயிருடன்
கல்முனையிலிருந்து வெளியிணைப்பு இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்று கடந்த மாதம் 18ந் திகதி காணாமல் போன மூவரில் இருவர் 19 நாட்களின் பின்னர் கரை சேர்ந்தபொழுதும் பின்னர் அவரில் ஒருவர் வபாத்தானார். சாஹித் அப்துல் சமத் -வயது 36-, உமர் லெப்பை அப்துல் ரஹ்மான் -வயது 46-, அச்சி முஹம்மத் அஸ்வர் -வயது 27- ஆகியோரே கல்முனையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களாவர். மேற்படி இரு மீனவர்களும் திருகோணமலையிலிருந்து 301 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள கடற்பரப்பிலிருந்து கடற்படையினர் இவர்களை மீட்டு திருமலை துறைமுகத்தில் வைத்து சிகிச்சை யளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உமர் லெப்பை அப்துல் ரஹ்மான் வபாத்தாகியுள்ளார் .
சிகிச்சையின் பின்னர் சாஹித் அப்துல் சமத் அவரது சொந்த ஊரான கல்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சாஹித் அப்துல் சமத் கருத்துத் தெரிவிக்கையில், ‘நாங்கள் மூவரும் 18ம் திகதி கடலுக்குச் சென்றோம். வலை கட்டி அடுத்த நாள் காலை கரைவருவதற்கு வள்ளத்தில் வலைகளை ஏற்றிவிட்டு வெளியிணைப்பு இயந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது அதன் சாவி உடைந்துவிட்டது. விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »