Lankamuslim.org

Archive for ஜூன் 17th, 2010

மட்டக்களப்பு மாவட்ட உயர்மட்ட அதிகாரபூர்வ கூட்டதுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை !

with one comment

33 கிராமங்களையும் ஆயிரக் கணக்கான விவசாய காணிகளையும்  நூற்றுக்கணக்கான மக்களையும்   இழந்தவர்கள்   மீள்குடியேற்ற, அபிவிருத்தி கூட்டத்தில்  புறக்கணிப்பு  !

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும். பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை நடை பெற்ற உயர்மட்ட தீர்மானங்களை எடுக்ககூடிய கலந்துரையாடலுக்கு மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளீதரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் அழைக்க படவில்லை என்று குற்றம் சட்ட பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 முஸ்லிம் கிராமங்கள் கைவிடப்பட்டுள்ளது ஆயிர கணக்கான விவசாய காணிகள் பறிபோயுள்ளது நூற்று கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிரதிநிதிகள் அந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பான அதிகார பூர்வ தீர்மானமிக்க கூட்டதுக்கு அழைக்க படவில்லை ஆளும் தரப்பு பிதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 8:30 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொம்பனத்தெரு மஸ்ஜிதுகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ??

leave a comment »

கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? வெளிநாடுகளிலிருந்து உதவி கிடைக்கப் பெறுகின்றதா ? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பல கேள்விகளை எழுபியுள்ளனர் என்று நாம் தொடர்புகொண்ட எம்மை இது பற்றி தொடர்புகொண்ட நபர்களும் இந்த சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

இது பற்றி லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தியை பதிவு செய்துள்ளதுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்த நடவடிக்கை கொம்பனத்தெரு முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உனர்வை ஏற்படுத்தியுள்ளது சட்ட விரோதமானவை என்று கூறி 20 கும் அதிகமான முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் தகர்க்க பட்டமையை தொடர்ந்து இந்த மஸ்ஜிதுகள் விசாரணை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 2:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நிர்மாணிக்கப்படும் மின் காற்றாலைகளுக்கு பொறியிலாளர்கள் எதிர்ப்பு

leave a comment »

புதள்ளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடற்கரை பிரதேசத்தில் சுமார் 4500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் கற்றலை நிலையங்களை அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இலங்கை மின்சார பொறியிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். -இதற்கான ஒபந்தம் இந்தியா இலங்கையில் 50 வருடங்கள் குறித்த கடற்கரை பரப்பில் இந்தியா நிலை கொள்ள ஏதுவாக அமையும் என்று தெரிவிக்கபடுகின்றது – இந்நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமூலம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கரையோர பிரதேசங்களை 50 வருடங்கள் ஆக்கிரமிப்பதுடன் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்தபின்னர் மீதமுள்ள மின்னை கேபல்களினால் இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன அத்துடன் 50 வருட காலத்திற்கு இலங்கை கடல் பிரதேசங்களை இந்தியாவிற்கு வழங்க கூடாதென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது பெரும் அநீதி எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிகின்றன

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 1:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவு எல்லை நிர்ணயங்கள் முஸ்லிம்களுக்கு நிவாரனம் வழங்குமா ?

leave a comment »

S.M.அப்துல்லாஹ்
இலங்கையில் வாழும் சமூகங்களில் மிகவும் சிறிய நிலப்பகுதிகளில் செறிவாகவும் நெருக்கடிகளுடனும் வாழும் சமுகமாக இலங்கை முஸ்லிம் சமூகங்கம் வாழ்ந்து வருகின்றது என்பது ஒரு பொதுவான உண்மை உதாரணமாக இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடி இது தெற்காசியாவிலேயே மக்கள் நெரிசல் அதிகமாக கொண்ட நகரங்களில் ஒன்றாகும். அதேபோன்று முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும் அவர்கள் தங்களின் மக்கள் தொகைக்குரிய நிலபரப்பில் வாழ்வதில்லை அவர்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது அவர்கள் வாழும் நிலம் மிகவும் சிறிய அளவில் இருப்பதை பொதுவாக இலங்கை முழுவதும் அவதானிக்க முடியும் யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரை இந்த நிலைதான் காணப்படுகின்றது என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுகொள்ளபடுள்ள உண்மை இந்த வகையில் இன்று பிரதேச செயலாளர்களின் எல்லைகளையும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தல் என்ற அரசின் நடவடிக்கை முஸ்லிம் பிரதேசங்களிலும் சற்று முக்கியத்துவதுடன் பார்க்கப்படுகின்றது

எல்லை மறுசீரமைப்பு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எல்லைகளையும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தல் என்பன மக்கள் தொகை , அரசியல் உறுப்புரிமை என்பனபோன்ற காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 17, 2010 at 12:39 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது