Lankamuslim.org

Archive for ஜூன் 24th, 2010

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா  போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி  நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் பி.எம்.முர்ஷிதீன் தமது அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.லஃபார் தாஹிர் நேற்று இத்தடை உத்தரவை பிறப்பித்தார்.

கொழும்பு 10.மாளிகாவத்தை,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,இலக்கம் 239 ஐச் சேர்ந்த பி.எம்.முர்ஷிதீன் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஆர்.எம் பஸீம்,என்.எம்.ரியாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாஹிர் ஆஜரானார்- தமிழ் மிரர்

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டாக்டர் ஸாகிர் நாயக் பிரிட்டன் நுழைவு தடைக்கு சாவால் !

leave a comment »

சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது   இதை தொடர்ந்து அந்த  தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஸாகிர் நாயக் பிரிட்டனில் மிக  சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம்  நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார் தான் என்ன காரனங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை இந்திய தொலைகாச்சி ஒன்றுக்கு கடந்த 19 ஆம் திகதி வழகிய பேட்டியில் இரண்டு காரணங்களை கூறியுள்ளார் ஒன்று இஸ்லாம் பிரிட்டனிலும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளிலும் வேகமாக பரவிவருவதை சகிக்கமுடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன்  பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 11:24 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க Darusman தலைமையில் குழு

leave a comment »

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கை மீதான போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது அந்த நிபுணர்கள் குழுவின் தலைமை பொறுப்பிற்கு டாரூஸ்மான்- Marzuki Darusman- என்பவர் நியமிக்கப்பட்டமை முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திகொண்டவர் எனவும், இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சர்வதேச முதன்மையாளர் குழுவிலும் டாரூஸ்மான் அங்கம் வகித்ததுடன், இதன் போதே அவர் முரண்பாடானவர் என அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

” நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால்
நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே”
சின்னவப் புலவர் (1877 -1966) (“அம்பாரைக் கொலனி”-கும்மிப் பாடல்கள்)

மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் முகவரிகளில் ஒருவராகத் திகழ்ந்த பிரபல சமூக சேவகரும் முன்னாள் அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றில் அழகியற்கலை (Fine Arts ) விரிவுரையாளராக பனியாற்றி, பின்னர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நீன்ட காலம் பிரதி அதிபராகவும் சிறிது காலம் அதிபராகவும் பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற பிரபல ஓவியர் கலாபூஷனம் அல் ஹாஜ் ஜனாப் முஹமது ஷா முஹமது அசீஸ் (சமாதான நீதவான்) சென்ற வியாழக்கிழமை (17 ஜூன் 2010) இலண்டனில் தனது எண்பத்தியொரு வயதில்  விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜூன் 24, 2010 at 9:09 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது