ஜேர்மன் நாட்டின் நிதி உதவியில் நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு
மூதூர் செய்தியாளர்: ஜேர்மன் நாட்டின் நிதி உதவியில் ‘திரீசீடி’ அமைப்பினால் பாடசாலை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மூதூரில் இடம்பெற்றது.
‘திரீசீடி’ அமைப்பின் பிரதித் தலைவர் எம்.எஸ்.எம்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், எஸ்.சீ.ஐ. அமைப்பின் போதனாசிரியர் கிறிஸ்டி ரோய், மூதூர் வலயக் கல்விப் பணி மனையின் திட்டமிடல் உதவியாளர் எம்.எஸ்.எம். றமீம், ‘திரீசீடி’ அமைப்பின் செயலாளர் ஏ.டபிள்யு.எம் புஹாரி மேற் பார்வை சுகாதார பரிசோதகர் பீ.கே. முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் குடிநீரை சேகாpத்து வழங்கும் வகையில் இந்நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
பின்னூட்டமொன்றை இடுக