Lankamuslim.org

இலங்கை தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்

leave a comment »

அமைச்சரும் யு.என்.எப்.யின் தலைவருமான விமல் வீரவன்ச தேர்தல் முறை  மாற்றங்கள்  செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்   கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் சாசனத்தில் மூன்று கட்டங்களாக திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும், முதலாவது கட்டத்தில் ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் அடுத்த   கட்டங்கள்   தேர்தல் முறைமை மாற்றம்  இலங்கையில் செனட் சபை ஒன்றை  உருவாக்குதல் தொடர்பான மாற்றங்கள் செய்யப்படும் என்றும்  செனட் சபை உருவாக்குதல் தொடர்பிம் புதிய சட்ட மூலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு இந்தியா கட்டளைகளைப் பிறப்பிக்கக் கூடாது என்று அங்கு தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 14, 2010 இல் 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக