ஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை
கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர் இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது. இது தொடர்பாக பல பெற்றோர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை இளம் சமூதாயத்தை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த உத்தர பெரிய பங்குவகிக்கும் என்று தாம் நம்புவதாக கூறினர்
பின்னூட்டமொன்றை இடுக