Lankamuslim.org

கொம்பனித்தெரு குடியிருப்பு அகற்றப்பட்டமை தொடர்பான நூல் வெளிவந்துள்ளது

with one comment


அண்மையில் கொழும்பு,கொம்பனித்தெரு பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் சட்டவிரோதம் எனக் கூறி அரசாங்கத்தினால் இடித்து தகர்த்து அகற்றப்பட்டன. இவற்றின் உண்மைத்தன்மையை விளக்கும் ஆவணங்களுடன், நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையம் -MIC-தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இதனை வெளியிட்டது.ரண்முத்து ஹோட்டலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற் வைபவம் ஒன்றில் நூலின் பிரதிகள் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது நூலின் பிரதியொன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமிடம் முஸ்லிம் தகவல் நிலைய செயலாளர் ஸுஹைர் காரியப்பர் கையளிப்பதை படத்தில் காணலாம் இந்த நிகழ்வில் முஸ்லிம் சமூக பல்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக சட்டத்தரணி அஸீஸ் The President of the Bar Association of Sri Lanka கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்

Written by lankamuslim

ஜூன் 10, 2010 இல் 12:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. where are our Ministers?

    bishru

    ஜூன் 11, 2010 at 8:38 முப


பின்னூட்டமொன்றை இடுக