Lankamuslim.org

வருடங்கள் 6: கல்முனையில் சுனாமியால் பாதிக்கபட்ட பலருக்கு இன்னும் வீடுகள் வழங்கப்படவில்லை

leave a comment »

இன்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை பிரதேச கல்முனை குடி பகுதியில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்க மக்களுக்கு வீடுகளை கையளிப்பதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கண்டித்து இன்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் விரைவாக பகிர்ந்தளிக்குமாறு கோரியே இந்த ஆர்பாட்டம் நடைபெருள்ளது சர்வதேச நிறுவனங்களால் கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பல வீடுகள் இதுவரையில் கையளிக்கப்பட வில்லை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கண்னங்கர கலந்துரையாடி மீண்டும் வாக்குறுதிகளை வழங்கி சென்றுள்ளார்.இவ்வாறு பலதடவைகள் ஆர்ப்பாட்டமும் வாக்குறுதிகளும் வழங்கபப்ட்டு வருகின்றன என்று கல்முனையில் இருந்து நாம் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜூன் 16, 2010 இல் 4:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக