Lankamuslim.org

கல்முனையில் சுனாமியால் வீ டுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது

leave a comment »

கல்முனை பிர தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை இரவேளிக்கன்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று குழுக்கள் முறையில் தொடர் மாடி வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

கல்முனை பிரதேச கல்முனை குடி பகுதியில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்க மக்களுக்கு வீடுகளை கையளிப்பதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை கண்டித்து 16.6.2010 அன்றும் அதற்கு முன்னரும் கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கண்னங்கர கலந்துரையாடி வாக்குறுதி வழங்கியமைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நேற்று பபகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

ஜூன் 22, 2010 இல் 5:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக