நிபுணர்கள் குழு நியமனம் அவசியமற்றது: அரசு
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு அரசு தனது கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளது. இறுதி போரின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அரசின் மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காகன ஆலோசனைகளை வழங்க இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளது.
நிபுணர்கள் குழு நியமனம் தேவையற்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன எனினும் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை பான் கீ மூன் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிப்பதில் மாற்றம் இல்லை என தெரிவிக்கியபடுள்ளது நிபுணர் குழு உருவாக்கத்துக்கு ஐநா பாதுகாப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
பின்னூட்டமொன்றை இடுக