Lankamuslim.org

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா  போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி  நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் பி.எம்.முர்ஷிதீன் தமது அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.லஃபார் தாஹிர் நேற்று இத்தடை உத்தரவை பிறப்பித்தார்.

கொழும்பு 10.மாளிகாவத்தை,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,இலக்கம் 239 ஐச் சேர்ந்த பி.எம்.முர்ஷிதீன் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஆர்.எம் பஸீம்,என்.எம்.ரியாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாஹிர் ஆஜரானார்- தமிழ் மிரர்

Written by lankamuslim

ஜூன் 24, 2010 இல் 9:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக