முல்லைத்தீவில் 23 முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றம்
1990ம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து வெளியேற்ற பட்டு புத்தளத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92பேர் எதிர்வரும் 30ம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்ற உள்ளதாக முல்லைத்தீவு அரசஅதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது . முதற் தடவையாக வெளியேற்றபட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுகிறது. புத்தளத்தில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தங்கியுள்ள தமிழ் குடும்பங்களுமாக மொத்தமாக 218 குடும்பங்களைச் சேர்ந்த 642பேர் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக மாவட்ட திட்டப் பணிப் பாளர் எஸ். சிறீரங்கன் கூறினார். மேற்படி 19 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே பலர் மீள்குடியேற்றப்பட்டுள்ளர் என்று தெரிவிக்கபட்டுள்ளது
பின்னூட்டமொன்றை இடுக