யாழ் முஸ்லிம்களில் 400 குடும்பங்கள் மட்டும் மீள் குடியேறியுள்ளன !
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உண்மையான தகவல்கள் பிரகாரம் இது வரை யாழ்ப்பாணத்தில் 400 வரையான குடும்பங்கள்தான் மீள் குடியேறியுள்ளது அவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான உதவிகள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது ஜனாதிபதி செயலகத்தினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாண lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
ஆனாலும் இதுவரை யாழ்பாணத்தில் தம்மை பதிவு செய்து கொண்ட குடும்பங்களாக 1800 வரையான குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் விரிவாக அவர்களின் 400 வரையான குடும்பங்களை தவிர ஏனைய குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் குடி யிருப்பதற்கான வசதிகள் இல்லாமையால் திரும்பி சென்றுள்ளது என்று தெரிவிக்கின்றனர் இவர்கள் பெரும்பாலும் மதவாச்சி, இக்கிரிகொல்லாவ, புத்தளம் போன்ற பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கின்றனர்
பின்னூட்டமொன்றை இடுக