Lankamuslim.org

எமக்கு நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை

leave a comment »

பெருவெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இவர்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் பல இஸ்லாமிய மற்றும் அமைப்புகள் இணைந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது

ஆனாலும் பெருவெள்ளத்தாள் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு இந்த நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப் படுகின்றது

குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களுக்கு இது வரை எந்த நிவாரண பொருட்களும் வந்தடையவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது விரிவாக

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விரிப்பத்தான் சேனை ,குடுவில் ,வாங்காமம், நல்ல தண்ணிமலை அமீர் அலிபுரம், மஜீத் புரம், இறக்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு முழுமையாக நிவாரண பொருட்கள் வந்து சேரவில்லை என்று சுட்டிக்காட்டபடுகின்றது

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 இல் 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக