Archive for ஓகஸ்ட் 3rd, 2012
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறமாட்டார்கள்
நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறமாட்டார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்திய- இலங்கை வணிக மாநாடு
TamilBBC: இந்திய- இலங்கை வணிகத்தை ஊக்குவிக்கும் முகமான இரு நாட்டு வணிகத் தலைவர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய வணிக அமைச்சர் ஆனந்த் ஷர்மா மற்றும் இலங்கை வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியர் தலைமையிலான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
2011 வாக்காளர் இடாப்பு இணையத்தில்
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தேர்தல்கள் செயலக இணையத்தளமான http://www.slelections.gov.lk இல் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை வாக்காளர்கள் பார்வையிட முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் வபாத்
கண்டி கெலிஓயா, கலுகமுவ என்ற இடத்தில் மஹாவலி கங்கையில் நண்பர்களுடன் நேற்று மாலை நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயின்று வந்த கெலிஓயாவத்தையைச் சேர்ந்த எம்.ஜே. இம்தாத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மஸ்ஜித்தை மூடமுடியாது: இன்றைய வெலிக்கடை கூட்டத்தில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்
ஏ.அப்துல்லாஹ்: ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமயில் இன்று காலை 03.08.2012-வெலிக்கடையில் இடம்பெற்றுள்ளது. அதில் மஸ்ஜிதின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினரும் , ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் நிர்வாகம் , முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
22வது ஸூஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சஹீத் அஹமட், F.M.பர்ஹான்: அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தேசிய காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
FM.பர்ஹான்: திருகோணமலை மாட்டத்தில் கிண்ணியா தேசிய காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் ஸபருல்லாஹ் கான் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (3.8.2012) நண்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
குக்கிராமங்களில் கூட ஒன்றுகூடி தொழுகை நடாத்த அஞ்சுகின்ற காலமிது
F.M.பர்ஹான்: குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழுகை நடாத்தக் கூட அஞ்சுகின்ற காலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக குருநாகலில் ஆர்ப்பாட்டம்
குருநாகலிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது புனையப்பட்டுள்ள போலி கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிகழமை குருநாகல் தெல்லியகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு முன்னால் பன்றித் தலை
பிரான்ஸில் பள்ளிவாசல் வாயிலில் இரு பன்றித் தலைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பிரான்ஸில் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு செயல்களில் ஒன்று என அந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நிந்தவூரில் இரு சிறுமியர் கடத்தல்
நிந்தவூரில் இருந்து சஹீத் அஹமட்: நிந்தவூரில் வைத்து வானில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் இருவர் அம்பாறை நகரில் அமைந்துள்ள இராணுவச் சாவடிக்கு முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவத்தால் நேற்றுமுன்தினம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இன்று 22வது சுஹதாக்கள் தினம்
முஹம்மட் அம்ஹர்: இன்று 22வது சுஹதாக்கள் தினம், சுஹதாக்கள் தேசிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுஹதாக்கள் தினம் தொடர்பான விசேட சொற்பொழிவு துஆ பிரார்த்தனை என்பவற்றுடன் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையுடன் விஷேட இப்தார் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
திரு செபஸ்டியன் அவர்களுக்கு எனது பதில்
மூதூர் முஹம்மதலி ஜின்னா
தேசம்நெட்’ வெளியிட்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பற்றிய ஆக்கத்துக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டம் பார்த்தேன். கடந்தகாலத்தில் மூதூரில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் எழதியுள்ளீர்கள். முதலில் நாம் ஒன்றை மனங் கொள்வோம். இணையதளம் என்பது மக்கள் மத்தியில் சரியான கருத்துருவாக்கத்தைச் செய்யும் பணியை மேற்கொள்கின்ற ஊடகமாகும். அது எமக்குத்தருகின்ற வாய்ப்பை நாம் நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »